×

சொத்து தகராறில் தாயை அடித்து கொன்ற மகன்: அமைந்தகரையில் பரபரப்பு

அண்ணாநகர்: அமைந்தகரையில் சொத்து பிரித்து தராத தகராறில் தாயை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். அமைந்தகரை ரயில்வே காலனி 3வது தெருவை சேர்ந்தவர் கோட்டீஸ்வராவ் (86). இவரது மனைவி வெங்கடசுப்பம்மா (82). இவர்களுக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இதில், இளைய மகன் முரளி கிருஷ்ணா (60), தனக்கான சொத்துகளை பிரித்து கொடுக்க வேண்டும், என நீண்ட காலமாக பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி தாய், தந்தை ஆகியோரிடம் இதுதொடர்பாக மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், தாய், தந்தை இருவரையும் சரமாரியாக அடித்து, உதைத்துள்ளார். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடசுப்பம்மா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து வந்த அமைந்தகரை போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்கு பதிந்து, முரளிகிருஷ்ணாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post சொத்து தகராறில் தாயை அடித்து கொன்ற மகன்: அமைந்தகரையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Suktakarai ,Annanagar ,Nuktakarai ,Nitakarai ,Railway… ,
× RELATED டிடிஎஃப் வாசன் தனது செல்போனை...