×

ஆந்திர அரசியலில் திடீர் பரபரப்பு; சந்திரபாபுநாயுடுவுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் கட்சிக்கு முக்கிய பங்காற்றிய தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், சந்திரபாபுவுடன், அவரது வீட்டில் ஆலோசனை நடத்திய சம்பவம் ஆந்திர அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் லோகேஷ் உடன் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கன்னவரம் விமான நிலையத்திற்கு நேற்று வந்தார். பின்னர் இருவரும் ஒரே காரில் அங்கிருந்து நேரடியாக உண்டவள்ளியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபுவின் வீட்டிற்கு சென்றனர்.

கடந்த தேர்தலில் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்து பிரசாந்த் கிஷோர் முக்கிய பங்கு வகித்தார். இன்னும் 3 மாதங்களில் ஆந்திர சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதுவரை தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் வியூக நிபுணராக ராபின் சர்மா இருந்து வருகிறார். இந்நிலையில் பிரசாந்த் கிஷோருடன் ராபின் சர்மா குழுவை சேர்ந்தவர்களும் சந்திரபாபு இல்லத்துக்கு சென்று ஆலோசனை நடத்தினர்.

The post ஆந்திர அரசியலில் திடீர் பரபரப்பு; சந்திரபாபுநாயுடுவுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : AP ,Prashant Kishore ,Chandrababunayudu ,Jeganmohan ,Chandrababu ,
× RELATED ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உரிய...