×

தொழிலாளி அடித்து கொலை 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை

கடலூர்: பண்ருட்டி அருகே தொழிலாளியை அடித்து கொலை செய்த வழக்கில், இரண்டு வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழக்குப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43). தொழிலாளியான இவர் கடந்த மே மாதம் 17ம் தேதி அதே பகுதியில் உள்ள அய்யனார் கோயில் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கூலி தொழிலாளி ஒருவர், ஏரியில் கை கால்களை கழுவ முயன்றார். இதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த ஞானகுரு(27), ராஜசேகர்(23) ஆகிய இருவரும் அந்த கூலி தொழிலாளியிடம் எங்கள் ஊர் ஏரியில் கை கால்களை கழுவ கூடாது என்று கூறியுள்ளனர். இதை சக்திவேல் தட்டி கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த ஞானகுருவும், ராஜசேகரும், சக்திவேலை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஞானகுரு மற்றும் ராஜசேகரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று இந்த வழக்கில் நீதிபதி பிரகாஷ் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், ஞானகுரு மற்றும் ராஜசேகர் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரையும் போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post தொழிலாளி அடித்து கொலை 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Panruti ,Dinakaran ,
× RELATED 17 வயது சிறுமியுடன் காதல் 19 வயது சிறுவன் மீது வழக்கு