×

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 2301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!

சென்னை: எண்ணூர் முகத்துவார பகுதியில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 2301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணம் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 787 மீன்பிடி படகுகளை சரிசெய்திட தலா ரூ.10,000 மீனவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 2301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,Ennore estuary ,Dinakaran ,
× RELATED மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன்...