×

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி விமான கட்டணம் பல மடங்கு உயர்வு: மக்கள் அவதி

சென்னை: தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்திற்கு செல்லும் விமானங்களில், பயணிகள் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வதால் விமான கட்டணம் பல மடங்கு உயந்துள்ளது. சென்னை திருவனந்தபுரம் இடையிலான கட்டணம் ரூ.2,800-லிருந்து சுமார் ரூ.15,000 வரை உயர்ந்துள்ளது. கொச்சி நகருக்கான கட்டணம் ரூ.3,000-லிருந்து சுமார் -ரூ.16,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை – தூத்துக்குடி இடையிலான விமான கட்டணம் ரூ.4,000-லிருந்து ரூ.14,000 வரை உயர்ந்துள்ளது. சென்னை – மதுரை இடையிலான கட்டணம் ரூ.3,314 லிருந்து ரூ.10,192 முதல் ரூ.17,950 வரை உயர்ந்துள்ளது. சென்னை – கோவை இடையிலான கட்டணம் ரூ.3,315 லிருந்து -ரூ.14,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை – திருச்சி இடையே ரூ.2,579-ஆக இருந்த கட்டணம் ரூ.9,555 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

The post கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி விமான கட்டணம் பல மடங்கு உயர்வு: மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Christmas ,Chennai ,Kerala ,Christmas Eve ,
× RELATED தமிழக – கேரள எல்லையில் முகாமிட்ட யானை உயிரிழப்பு