×

பொய் புகார் கூறி மிரட்டி வருபவர் மீது காவல் நிலையத்தில் தாசில்தார் புகார்

திருத்தணி, டிச. 23:திருத்தணி தாசில்தார் மதன் நேற்று திருத்தணி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருத்தணி தாலுகா, அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன்(45). இவர், நிலத்தை சர்வே செய்து தருமாறு விண்ணப்பம் கொடுத்துள்ளார். அந்த புல எண்ணை பரிசீலனை செய்ததில், நீதிமன்ற வழக்கில் உள்ளதால் சர்வே செய்ய முடியாது. அவ்வாறு, சர்வே செய்தால் இரு சமூகத்தினருக்கிடையே மோதல் ஏற்படும் என்பதால் விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து வெங்கடேஸ்வரன், தாசில்தார் மதன், துணை தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் பணம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட கலெக்டரிடம் பொய் புகார் கொடுத்துள்ளார். இது தவிர நேற்றுமுன்தினம் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்த வெங்கடேஸ்வரன் அங்கிருந்த துணை தாசில்தார் மற்றும் அலுவலர்களை மிரட்டியுள்ளார். எனவே, வெங்கடேஸ்வரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த புகாரை பெற்ற திருத்தணி போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

The post பொய் புகார் கூறி மிரட்டி வருபவர் மீது காவல் நிலையத்தில் தாசில்தார் புகார் appeared first on Dinakaran.

Tags : Tahsildar ,Tiruthani ,Thiruthani ,Tahsildar Madan ,Thiruthani Police Station ,
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...