×

போரூர் அருகே பரபரப்பு அரசு பள்ளியில் மாணவிகள் மோதல்

குன்றத்தூர், டிச.23: போரூர் அருகே அரசு பள்ளி மாணவிகள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது. போரூர் அடுத்த கொளப்பாக்கம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், 12ம் வகுப்பு பயிலும் மாணவிகள் சிலர் நேற்று தங்களுக்குள் ஒருவரையொருவர் பள்ளி வளாகத்திலேயே சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து, ஒரு தரப்பு மாணவியின் பெற்றோர், எதிர்தரப்பு மாணவிகள் மீது மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, போலீசார் மாணவிகள் சிலரை விசாரணைக்காக அழைத்ததின்பேரில், மாணவிகள் தங்களது பெற்றோருடன் பள்ளி சீருடையை அணிந்தவாறு விசாரணையில் கலந்துகொண்டனர்.‌

அப்போது, கடந்த சில தினங்களுக்கு முன் அரசு பேருந்தில் ஆபத்தான நிலையில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை தாக்கிய வழக்கில், போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து, மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த நடிகையும் பாஜ பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார், நடந்த சம்பவம் குறித்து மாணவிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், பள்ளி சீருடையில் மாணவிகளை எப்படி விசாரணைக்கு அழைக்கலாம் என்று அவர் போலீசார் மீது குற்றம் சாட்டினார். அதற்கு மாணவியின் தாய் ஒருவர், போலீசார் தாய் ஸ்தானத்தில் மட்டுமே தவறு செய்த மாணவிகளை கண்டித்ததாக கூறினர். அதற்கு ரஞ்சனா நாச்சியாரோ, நானும் தவறு செய்த மாணவர்களை தாய் ஸ்தானத்தில் தான் கண்டித்தேன். போலீசார் என்னை விட்டார்களா என்று திருப்பிக்கேட்டுள்ளார். பின்னர், பள்ளி மாணவிகளை சீருடையில் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் விதிமுறை மீறி இருப்பதாகவும், இதுகுறித்து ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் தான் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறிவிட்டு சென்றார்.

The post போரூர் அருகே பரபரப்பு அரசு பள்ளியில் மாணவிகள் மோதல் appeared first on Dinakaran.

Tags : Senshu Govt School ,Borur ,Kunradhur ,Porur ,Dinakaran ,
× RELATED சென்னையில் அடுக்குமாடி...