- செட்டிக்குளம்
- Badalur
- முதன்மை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்
- ஆலத்தூர் தாலுக்கா
- விழிப்புணர்வு கல்
- கூட்டுறவு சங்கம்
- தின மலர்
பாடாலூர்,டிச.23: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிதிசார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிதிசார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு கூட்டுறவு சங்க செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக நிதிசார் கல்வி ஆலோசகர் குன்னம் வட்டார கள மேலாளர் துரைஅரசு கலந்து கொண்டு அரசு வழங்கும் எண்ணற்ற திட்டங்களை முறையாக பயன்படுத்த வேண்டும். சங்கத்தில் வழங்கப்படும் கடன்கள் குறித்தும், நகை கடன், அதிகளவில் மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் பெற்று பயனடைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார். இந்நிகழ்வில் வங்கி வாடிக்கையாளர்கள், வங்கி பணியாளர்கள், நியாய விலை கடை விற்பனையாளர்கள், மகளிர் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post செட்டிகுளத்தில் கூட்டுறவு சங்கத்தில் நிதிசார் விழிப்புணர்வு கல்வி முகாம் appeared first on Dinakaran.