×

செருப்பால் தாக்கி கொண்ட பாஜவினர்

பேரணாம்பட்டு: ஒன்றிய அரசின் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசார வாகனம் பல்வேறு கிராமங்களுக்கு சென்று வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி கிராமத்திற்கு கடந்த 19ம் தேதி பிரசார வாகனம் சென்றது. அப்போது அங்கு வந்த அந்த கட்சியின் ஒன்றிய தலைவர் வனஜா மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகியோர் பிரசாரம் செய்ய வந்தவர்களுக்கு சாப்பிட உணவு கொடுத்தீர்களா?, பொதுமக்கள் உட்கார சேர் ஏன் போடவில்லை?, நான் வருவதற்கு முன்னதாக ஏன் நிகழ்ச்சியை தொடங்கினீர்கள் என்று கேட்டு ஊராட்சி மன்ற தலைவர், கட்சியினர் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரேகா தரப்புக்கும், பாஜக ஒன்றிய தலைவர் வனஜா தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியது. இதில், ஆத்திரமடைந்தவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு காலணியால் மாறிமாறி அடித்துக்கொண்டனர். அதைதொடர்ந்து இரு தரப்பினரும் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து இருதரப்பினரிடையும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இரு தரப்பினரும் சமாதானமாக சென்று விடுகிறோம் என கூறி புகாரை வாபஸ் பெற்றனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post செருப்பால் தாக்கி கொண்ட பாஜவினர் appeared first on Dinakaran.

Tags : Bajans ,Peranampatu ,Union Government ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...