×

கலாஷேத்ரா கல்லூரி நடன ஆசிரியருக்கு எதிராக முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த ஆணை

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி நடன ஆசிரியருக்கு எதிராக முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணை நடத்தவும், முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யும்படியும் காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக முன்னாள் 6 மாணவி புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைதாகி ஜாமின் பெற்றுள்ளார். நடனம் கற்று கொடுப்பதாக கூறி மற்றொரு நடன ஆசிரியரும் தன்னிடம் தவறாக நடந்ததாக மற்றொரு மாணவியும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகாரில் தனது பெயரை குறிப்பிடாமல் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவி மாணவி மனு அளித்துள்ளார். கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் பாலியல் தொல்லை அளித்ததாக ருக்மணி அருண்டேல் கல்லூரி முன்னாள் மாணவி புகார் அளித்தார். இது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் அந்த கல்லூரியின் நடன துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மனை ஏப்ரல் 3ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹரி பத்மன் தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை ஹரி பத்மன் வாபஸ் பெற்றிருந்தார்.

இந்நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றம் ஹரிபத்மனுக்கு ஜாமீன் வழங்கியது. இதனால், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் நேற்று விசாரணைக்கு வந்த போது, சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜூன் 3ம் தேதி ஜாமீன் வழங்கி விட்டதாகவும் அதனால் இந்த மனுவை திரும்பப்பெற அனுமதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் ஹரிபத்மன் தரப்பில் கோரப்பட்டது. சைதாப்பேட்டை நீதிமன்றம் ஏற்கனவே ஜாமீன் வழங்கி விட்டதால் மனுதாரர் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஜாமீன் மனுவை திரும்பப் பெற அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கலாஷேத்ரா கல்லூரி நடன ஆசிரியருக்கு எதிராக முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணை நடத்தவும், முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யும்படியும் காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது

The post கலாஷேத்ரா கல்லூரி நடன ஆசிரியருக்கு எதிராக முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த ஆணை appeared first on Dinakaran.

Tags : Kalashetra College ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை கலாஷேத்ரா கல்லூரி முன்னாள்...