பாங்காக்: தாய்லாந்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்த யானைகள் குழந்தைகளை உற்சாகப்படுத்தின. தாய்லாந்து நாட்டில் உள்ள அயோத்தியா பகுதியில் அமைந்துள்ள தனியார் மழலையர் பள்ளியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது.
2000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதில் விதவிதமாக ஆடை அணிந்து கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 5 யானைகள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் அழைத்து வரப்பட்டன. அந்த யானைகளை குழந்தைகள் வரவேற்றனர். பொம்மை, பலூன் என குழந்தைகளுக்கு யானைகள் மூலம் பரிசுகள் வழங்கப்பட்டன. குழந்தைகள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களும் இதில் கலந்து கொண்டு உற்சாகம் அடைந்தனர்.
The post கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. தாய்லாந்தில் உள்ள மழலையர் பள்ளியில் கிறிஸ்துமஸ் தாத்தாவாக வந்த யானைகளுக்கு குழந்தைகள் உற்சாக வரவேற்பு..!! appeared first on Dinakaran.