தஞ்சை: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து போனில் வீடியோ எடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியை வன்கொடுமை செய்த அபினேஷ், அவரது நண்பர்கள் ஸ்ரீதரன், அரவிந்தன், ஸ்ரீகாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தனியே பேச வேண்டுமென்று அழைத்து சென்று அபினேஷ் தன் நண்பர்களுடன் சேர்ந்து வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்ததை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிய ராகுல் கைது செய்யப்பட்டார்.
The post தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து போனில் வீடியோ எடுத்த 5 பேர் கைது..!! appeared first on Dinakaran.