×

தஞ்சை அருகே நாகநாதர் கோயிலில் 12 ஐம்பொன் சிலைகளை திருடியவரை கைது செய்தது போலீஸ்..!!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பூக்குளம் பகுதியில் நாகநாதர் கோயிலில் 12 ஐம்பொன் சிலைகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர். நாகநாதர் கோயிலில் 5 நாட்களுக்கு முன்பு 12 ஐம்பொன்சிலைகள், நகைகள், வெள்ளிப் பொருட்கள் திருட்டு போனது. கோயிலின் பின்புறம் குளத்தின் கரையில் மூட்டையில் இருந்த 12 ஐம்பொன் சிலைகளை போலீஸ் மீட்டது. சிலைகளை திருடிய ஆனந்த் என்பவரை கைது செய்த போலீசார் தங்க நகை, வெள்ளிப் பொருட்களை மீட்டனர்.

The post தஞ்சை அருகே நாகநாதர் கோயிலில் 12 ஐம்பொன் சிலைகளை திருடியவரை கைது செய்தது போலீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Aimpon ,Naganath temple ,Thanjavur ,Pookkulam ,Thanjavur district ,Naganathar… ,Naganathar temple ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...