×

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் பொன்முடி சந்திப்பு..!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் பொன்முடி சந்தித்து பேசினார். சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் முதல்முறையாக பொன்முடி சந்திப்பு நிகழ்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி, அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டு சிறை, ரூ.50 லட்சம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. பொன்முடி வசம் இருந்த உயர்கல்வித்துறை, அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் பொன்முடி சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Former Minister ,Ponmudi ,Chief Minister ,M.K.Stalin ,Alwarpet, Chennai ,Alwarpettai, Chennai ,
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...