×

கோபி அருகே துணிகரம் 2 கோயில்களில் உண்டியலை உடைத்து பக்தர்களின் காணிக்கை கொள்ளை

கோபி : கோபி அருகே 2 கோயில்களின் பூட்டை உடைத்த கொள்ளையர் உண்டியலை உடைத்து காணிக்கை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நம்பியூர் உருமம்பாளையத்தில் சக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பூசாரி, நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜை முடிந்தபிறகு கோயிலை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை கிராம மக்கள் கோயிலுக்கு வந்தபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். கோயிலுக்குள் வைக்கப்பட்டு இருந்த உண்டியலும் மாயமாகி இருந்தது.

தொடர்ந்து கிராம மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா, எஸ்ஐ சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கோயில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர், உண்டியலை எடுத்துச் சென்று அருகில் உள்ள விளை நிலத்தில் வைத்து, உண்டியலை உடைத்து உள்ளே இருந்த சுமார் பணம், காசுகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இதே போன்று மற்றொரு கோயிலிலும் கொள்ளை நடந்துள்ளது. கோபி அருகே உள்ள அயலூர் செம்மாண்டாம்பாளையம் கைகாட்டி பிரிவில் சக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு அர்ச்சகர் தம்பி என்பவர் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்த பிறகு கோயிலை பூட்டிச் சென்றார். நேற்று காலை அவர் பூஜை செய்ய வந்தபோது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சிறுவலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

நள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர், முகத்தை துணியால் மறைத்து கொண்டு, கோயில் உண்டியலை கடப்பாரையால் உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது சிசிடிவி ேகமராவில் பதிவாகி இருப்பது தெரியவந்தது. இந்த கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையரை போலீசார் தேடி வருகின்றனர்.
அடுத்தடுத்து இரு கோயில்களில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கோபி அருகே துணிகரம் 2 கோயில்களில் உண்டியலை உடைத்து பக்தர்களின் காணிக்கை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Vadhakaram ,Gopi ,Gobi ,
× RELATED கயத்தாறு அருகே துணிகரம் வீட்டை உடைத்து 65 பவுன் நகை, 1.5 லட்சம் பணம் கொள்ளை