×

உதகை அருகே தீட்டுக்கல் பகுதியில் கம்பி வேலியில் இருந்து மீட்கப்பட்ட சிறுத்தை உயிரிழப்பு..!!

நீலகிரி: உதகை அருகே தீட்டுக்கல் பகுதியில் கம்பி வேலியில் இருந்து மீட்கப்பட்ட சிறுத்தை உயிரிழந்தது. நீலகிரி மாவட்டத்தில் 67% வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் சிறுத்தை, புலிகள், யானைகள் போன்ற வனவிலங்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சிறுத்தைகளின் எண்ணிக்கை 10% உயர்ந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சிறுத்தைகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்கு அதிகரித்துள்ள நிலையில் நேற்று தீட்டுக்கல் பகுதியில் 4 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை உலா வந்துள்ளது. அங்கே அமைக்கப்பட்டு இருந்த கம்பி வேலியில் சிக்கி கொண்டுள்ளது. அதன் பின்னங்கால்கள் கம்பிகளில் சிக்கிய நிலையில் அதிலிருந்து தப்பிக்க முடியாமல் சிறுத்தை தவித்து வந்த நிலையில் அதிலிருந்து வெளியே வரமுடியாமல் போராடியது. சிறுத்தையின் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக உதகையில் இருக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் முதுமலையில் இருந்து வனத்துறை கால்நடை மருத்துவரை வரவழைத்து சுமார் 6 மணி நேரம் போராட்டத்திற்கு பின் அந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி இரவு 10 மணியளவில் சிறுத்தையை மீட்டனர். பின்னர் சிறுத்தையை வனத்துறையில் விடுவதற்காக பார்சன்ஸ் வேலி கொண்டு சென்று இரவு முழுவது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சிறுத்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் வனத்துறையினர் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post உதகை அருகே தீட்டுக்கல் பகுதியில் கம்பி வேலியில் இருந்து மீட்கப்பட்ட சிறுத்தை உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Theetukkal ,Utagai ,Nilgiris ,Thitukkal ,Uthagai ,Nilgiris district ,Utgai ,
× RELATED வந்தவாசி, உதகை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை!