×

போலீசாரை கத்தியால் தாக்கிய ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

விழுப்புரம், டிச. 22: விழுப்புரத்தில் போலீசாரை கத்தியால் வெட்ட முயன்ற ரவுடி குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விழுப்புரம் கிழக்கு பாண்டிரோட்டை சேர்ந்தவர் அப்பு(எ)கலையரசன்(28). பிரபல ரவுடி. இந்நிலையில் கடந்த மாதம் ரகசிய தகவலின்பேரில் அவரது வீட்டிற்கு சென்று நகர போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கலையரசன் போலீசாரை கத்தியால் வெட்ட முயன்றுள்ளார். சுதாரித்துகொண்ட போலீசார் உயிர்தப்பினர். இதுகுறித்து நகர காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.இதனிடையே கலையரசன் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அவரது நடவடிக்கையை தடுக்கும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சஷாங்சாய் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் பழனி நேற்று அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து கலையரசன் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

The post போலீசாரை கத்தியால் தாக்கிய ரவுடி குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Villupuram… ,Dinakaran ,
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...