தூத்துக்குடி, டிச. 22: முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூர் – தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12693 ) வழக்கமான அட்டவணைபடியே 21ம் தேதி தூத்துக்குடி வரை இயக்கப்படுகிறது. முன்னர் அறிவிக்கப்பட்ட மதுரை மற்றும் தூத்துக்குடி இடையே பகுதி ரத்து ரத்து செய்யப்படுகிறது. தூத்துக்குடி – சென்னை எழும்பூர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் (ரயில் எண். 12694) இன்று தூத்துக்குடியில் இருந்து அதன் வழக்கமான அட்டவணையில் இயக்கப்படும். முன்னர் அறிவிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் மதுரை இடையே பகுதி ரத்து ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post முத்துநகர் எக்ஸ்பிரஸ் வழக்கம்போல் இயக்கம் தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.