×

இந்தியாவில் சைக்கிளில் சுற்றுலா இத்தாலி நாட்டு தம்பதி மாமல்லபுரம் வருகை

 

மாமல்லபுரம்: இத்தாலி நாட்டை சேர்ந்தவர் மைக்கேலேஞ்ச்வ் (40), இவரது மனைவி பெடரிகா பிரைட் (35). இவர்களுக்கு டிசியானோ (7) என்ற மகனும், கோஸ்டான்ட் என்ற 1 வயது குழந்தையும் உள்ளது. மைக்கேலேஞ்ச்வ் இத்தாலி நாட்டில் சிவில் இன்ஜீனியராக ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், தங்கள் கம்பெனியில் சில மாதங்கள் விடுமுறை எடுத்துள்ள மைக்கேலேஞ்ச்வ் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார். இதில் தங்கள் நாட்டிலிருந்து கொண்டு வந்துள்ள பிரத்யேக சைக்கிள் மூலம் அவர்கள் மாமல்லபுரத்திற்கு நேற்று சுற்றுலா வந்தனர்.

இந்த பயணத்தில் மைக்கேலேஞ்ச்வ் மட்டும் தனது 1 வயது குழந்தையை பாதுகாப்பு பெல்ட் போட்டு, தொட்டிலில் படுக்க வைத்து, தனது சைக்கிளில் இணைத்து ஓட்டி வருகிறார். மனைவியும் மற்றொரு மகனும், தனித்தனி சைக்கிளில் ஒரு கயிறு மூலம் இணைத்து ஓட்டுகின்றனர். உடல் பயிற்சிக்காக தாங்கள் சொகுசு வாகனங்களில் பயணம் செய்வதில்லை எனவும், இந்தியா முழுவதும் சாலை மார்க்கமாக சைக்கிள் மூலமாகவே நாங்கள் குடும்பத்துடன் பயணம் மேற்க்கொள்ள உள்ளதாகவும் மைக்கேலேஞ்ச்வ் மகிழ்ச்சியோடு கூறினார். மாமல்லபுரம் சைக்கிள் பயணம் முடித்துக் கொண்டு அவர்கள், பாதுகாப்பாக நேற்று மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நோக்கி சைக்கிளில் புறப்பட்டனர்.

The post இந்தியாவில் சைக்கிளில் சுற்றுலா இத்தாலி நாட்டு தம்பதி மாமல்லபுரம் வருகை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,India ,Michelangelo ,Peterica Bright ,Ticiano ,
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...