திருவள்ளூர்: திருவள்ளூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் என்ஜிஓ காலனி 1 மற்றும் என்ஜிஓ காலனி 2 ஆகிய இரண்டு நியாய விலைக் கடைகளில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தவர் எஸ்.சேகர். இவர் மீது அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார்கள் அளித்த காரணத்தால் நிர்வாக காரணங்களுக்காக விற்பனையாளர் சேகரை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சார் பதிவாளர் மற்றும் செயலாட்சியர் சீ.விஜயவேலன் உத்தரவிட்டுள்ளார்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட எஸ்.சேகருக்கு மாற்றாக சுபா என்ற விற்பனையாளர் செயல்படுவார் என்றும் அந்த உத்தரவு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ரேஷன்கடை விற்பனையாளர் சஸ்பென்ட் appeared first on Dinakaran.