×

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பிளஸ் 2 மாணவன்: போக்சோ சட்டத்தில் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி செங்கல்பட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிறுவன் மாத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வருகிறான். இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து பரிசோதித்தனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் கருக்கலைப்பு செய்யச் சொல்லி மருத்துவரிடம் கூறியுள்ளனர். ஆனால் இதுகுறித்து, மருத்துவர்கள் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் மருத்துவமனைக்கு வந்த மகளிர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, மாணவியை கர்ப்பமாக்கிய 12ம் வகுப்பு மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

The post 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பிளஸ் 2 மாணவன்: போக்சோ சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Balur ,Dinakaran ,
× RELATED ஏடிஎம் அறை கதவு உடைக்கப்பட்டதாக காவல்துறைக்கு வந்த மர்ம போன்