×

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்: 3 பேர் காயம்!

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட்டிலிருந்து தானாமண்டி என்ற இடத்துக்கு 2 ராணுவ வாகனங்கள் சென்றபோது தீவிரவாதிகள் தாக்குதல் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்கள் மீதான தாக்குதலை அடுத்து பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நிலவியது. இதில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் மேலும் 3 வீரர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடைபெற்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதால் கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பூஞ்ச் மாவட்டத்தில் ஒரு மாதத்துக்குள் ராணுவம் மீது தீவிரவாதிகள் நடத்தும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

The post ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்: 3 பேர் காயம்! appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Punch district ,
× RELATED 4வது நாளாக முழு அடைப்பு போராட்டம் பாக்....