×

கயத்தாறு அருகே கனமழை: கழுத்தளவு நீரில் முதியவர் உடலை சுமந்து சென்ற அவலம்


கயத்தாறு: கயத்தாறு தாலுகா தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கம்மாபட்டி கிராமத்தில் சாமி என்ற மிக்கேல் சாமி (60). இவர் உடல்நலக் குறைவால் இறந்ததையடுத்து அவரது உடலை ஊருக்கு அருகில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்வதற்கு கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஏற்கனவே இவ்வூரின் சுடுகாட்டுக்கு முறையான பாதை இல்லை. இந்நிலையில் கயத்தாறு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் இருந்து தெற்கு இலந்தைகுளம் செல்லும் கண்மாய் ஓடையில் தண்ணீர் அதிகமாக சென்றதால் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

அதனால் வேறு வழியின்றி உள்ளூரை சேர்ந்த பொதுமக்கள் மிக்கேல்சாமி உடலை பெட்டியில் வைத்து கழுத்தளவு தண்ணீரில் இறங்கி தட்டுத் தடுமாறி கொண்டு சென்று அடக்கம் செய்தனர். வரும் காலங்களில் இந்த அவல நிலை தொடராமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பாலம் அமைத்துக் கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கயத்தாறு அருகே கனமழை: கழுத்தளவு நீரில் முதியவர் உடலை சுமந்து சென்ற அவலம் appeared first on Dinakaran.

Tags : Kayathar ,Gayatharu ,Michael Sammy ,Sammy ,Kammapatti ,South Ilandikulam ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே...