×

எண்ணெய் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம் : மீன்வளத்துறை தகவல்

சென்னை: எண்ணூர் முகத்துவாரத்தில் படர்ந்திருந்த எண்ணெய் கழிவுகளால் 787 படகுகள் சேதமடைந்துள்ளதாக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. காட்டுக்குப்பம், எண்ணுர் குப்பம், தாழங்குப்பம் உள்பட 9 கிராமங்களில் எண்ணெய் கசிவால் மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளது. எண்ணெய் கசிவால் சேதமடைந்த படகு ஒன்றுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம் வழங்கவேண்டும் என்று எண்ணெய் கசிவு தொடர்பாக தாமாக முன்வந்து பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்த வழக்கில் மீன்வளத்துறை பதில் அளித்துள்ளது.

 

The post எண்ணெய் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம் : மீன்வளத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Department of Fisheries ,Chennai ,Tolur estuary ,Fisheries Department ,Fisheries ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...