×

புளியந்தோப்பில் பயங்கரம்; கழுத்தறுத்து வாலிபர் கொலை: தண்டவாளத்தில் சடலம் மீட்பு


பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் கழுத்து அறுக்கப்பட்டு வாலிபர் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் ரயில்வே தண்டவாளம் அருகே கழுத்து அறுக்கப்பட்டும் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் வாலிபர் இறந்துகிடப்பதாக புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, எம்கேபி.நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன், இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் சென்று பார்த்தனர். இதன் பின்னர் அங்கு கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டு உடனடியாக பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுசம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தியதில், ‘’இறந்தவர் புளியந்தோப்பு பி.எஸ்.மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த சீனு (எ) சீனிவாசன் (23) என்பதும் இவர் மீது 3 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது’ என்றும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். நண்பர்கள் இடையே மது அருந்தும்போது ஏற்பட்ட பிரச்னையில் சீனு கொலை செய்யப்பட்டாரா, வேறு ஏதாவது பிரச்னையா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post புளியந்தோப்பில் பயங்கரம்; கழுத்தறுத்து வாலிபர் கொலை: தண்டவாளத்தில் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tamarind ,Perambur ,Chennai ,Pulianthop ,Kanikapuram Railway… ,
× RELATED மாவட்டத்தில் விளைச்சல் அமோகம்;...