×

நெல்லையில் அதிகனமழையின் போது முன்னெச்சரிக்கையாக 142 கர்ப்பிணிகள் மருத்துவமனைகளில் சேர்ப்பு!!

நெல்லை : நெல்லை மாவட்டத்தில் அதிகனமழையின் போது முன்னெச்சரிக்கையாக 142 கர்ப்பிணிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக 696 கர்ப்பிணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. 142 கர்ப்பிணிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2 நாட்களில் 91 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. பிரசவ எண்ணிக்கை விவரங்கள்: ஆரம்ப சுகாதார நிலையம் 14, அரசு மருத்துவமனை 13, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 21, தனியார் மருத்துவமனை 43

The post நெல்லையில் அதிகனமழையின் போது முன்னெச்சரிக்கையாக 142 கர்ப்பிணிகள் மருத்துவமனைகளில் சேர்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : Nella ,Nellai ,Nellai district ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறையை கொண்டாட நெல்லை...