டெல்லி: நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக மென் பொறியாளர் சாய்கிருஸ்ணா என்பவர் கைது செய்யப்பட்டார். கர்நாடகாவின் பாகல்கோட் நகரைச் சேர்ந்த சாய்கிருஷ்ணாவை டெல்லி போலீஸ் கைது செய்தது. நாடாளுமன்றத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்து வண்ண புகைக்குப்பிகளை வீசிய வழக்கில் ஏற்கனவே சாகர் சர்மா, மனோ ரஞ்சன், நீலம் தேவி, அமோல் ஷிண்டே, லலித் மோகன் ஜா, மகேஷ் குமாவத் ஆகிய 6பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்: 7வது நபராக மென் பொறியாளர் கைது appeared first on Dinakaran.