×

விபத்தில் டிரைவர் பலி

போடி, டிச. 21: போடி அருகே உள்ள பொட்டல்களத்தைச் சேர்ந்தவர் சின்னமுனியாண்டி மகன் சுபாஷ் (28). இவர், போடியை சேர்ந்த பாண்டி மாங்காய் குடோனில் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பின், டூவீலரில் வீட்டிற்கு சுபாஷ் கிளம்பினார். ஆனால், இரவு நீண்ட நேரமாகியும், அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இந்நிலையில், பொட்டல்களம் வரும் வழியில் தலையில் அடிபட்ட நிலையில், அவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த போடி தாலுகா போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், அவரது உடலை மீட்டு, போடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சுபாஷ் மதுபோதையில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களிடையே சோகம் நிலவி வருகிறது.

The post விபத்தில் டிரைவர் பலி appeared first on Dinakaran.

Tags : Bodi ,Chinnamuniandi ,Subash ,Potalkalam ,
× RELATED போடி ராசிங்காபுரத்தில் மலைபோல் மண் குவிப்பால் மக்கள் சிரமம்