×

வடமாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திருப்புத்தூர், டிச.21: மேற்கு வங்காள மாநிலம் கங்காசாகர் ஊரைச் சேர்ந்தவர் கோபால்தாஸ் மகன் சுமித்தாஸ்(30). திருப்புத்தூர் சிங்கம்புணரி சாலையில் உள்ள செங்கல் சூளையில் மம்முனிதாஸ்(33) என்ற பெண் மற்றும் ஒரு வயது பெண் குழந்தையுடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மழை காரணமாக செங்கல் சூளையில் வேலை பாதிப்படைந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமித்தாஸ், அந்த பெண்ணையும், குழந்தையையும் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டுள்ளார். பின்னர், சுமித்தாஸ் வீட்டிற்குள் தூக்கிட்டுக் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கண்டவராயன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

The post வடமாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tiruputhur ,Sumithas ,Gopaldas ,Gangasagar, West Bengal ,Tiruputur Singampunari road ,
× RELATED விண்வெளி கண்காட்சி அமைச்சர் திறந்து வைத்தார்