×

மாரியூர் கோயிலில் சனிபெயர்ச்சி விழா

சாயல்குடி, டிச.21: சாயல்குடி அருகே மாரியூர் பவளநிறவள்ளி அம்மன் உடனுரை பூவேந்தியநாதர் கோயிலில் சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு நேற்று மாலை சனிபகவான் பெயர்ச்சி ஆனார். சனி பெயர்ச்சி நடக்கும் ராசி காரர்கள், பாரிகாரத்திற்குரிய ராசிகாரர்களுக்காக சிறப்பு யாகசாலை வளர்க்கப்பட்டது. தொடர்ந்து வேதமந்திரங்களுடன் சனி பகவானுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட 11 வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

இதுபோன்று மூலவர் பூவேந்தியநாதருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பரிகார ராசிகாரர்களுக்கு சிறப்பு அர்ச்சனை நடத்தப்பட்டது. மேலும் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் உள்ள சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பரிகார ராசிகாரர்களுக்கு அர்ச்சனையும் நடந்தது. ராமநாதபுரம் தேவஸ்தானம் மற்றும் கடலாடி,மாரியூர் பிரதோஷ கமிட்டியாளர்கள் சார்பாக அன்னதானம் நடந்தது.

The post மாரியூர் கோயிலில் சனிபெயர்ச்சி விழா appeared first on Dinakaran.

Tags : Saturn festival ,Mariyur temple ,Sayalkudi ,Mariyur Pavalniravalli ,Amman Udanurai Bhuventhyanathar ,Lord ,Shani ,Saturn ,
× RELATED கடலாடி, முதுகுளத்தூர் கிராமங்களில்...