×

பட்டிவீரன்பட்டி பேரூராட்சி சார்பில் நடந்த முகாம்

திண்டுக்கல், டிச. 21: திண்டுக்கல்லில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இன்ஸ்பெக்டர் குருவத்தாய் ஆலோசனையின் பேரில், சிறப்பு எஸ்ஐ மகாலட்சுமி, தலைமை காவலர் சித்ரா செல்வி, போலீசார் பொதுமக்களிடம் நோட்டீஸ்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அந்த ேநாட்டீஸில், குழந்தைகள் கடத்தல், திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர்களாக ஆக்குவதை தடுத்தல் மற்றும் சைபர் கிரைம், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் இதுகுறித்து புகார் அளிக்க 1098, 181 ஆகிய தொலைபேசி எண்களில் அழைக்கலாம் என தெரிவித்தனர்.

The post பட்டிவீரன்பட்டி பேரூராட்சி சார்பில் நடந்த முகாம் appeared first on Dinakaran.

Tags : Pattiveeranpatti municipality ,Dindigul ,Anti-Child Trafficking Unit ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...