×

பொய்கை ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்தது

கடையநல்லூர், டிச.21:கடையநல்லூர் ஒன்றியம் பொய்கை ஊராட்சியில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையால் பொய்கை குளம் நிரம்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து வருவாய் துறையினர், யூனியன் அதிகாரிகள் பார்வையிட்டு மாற்று நடவடிக்கை மேற்கொண்டனர். கடையநல்லூர் ஒன்றியம் பொய்கை ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்தக் குளம் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக நிரம்பியது. இதையடுத்து நீர் ஊற்று ஏற்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்கு தண்ணீர் புகுந்தது. இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் நோயாளிகள் உள்ளிட்ட யாரும் உள்ளே செல்ல முடியாதவாறு தண்ணீர் தேங்கியுள்ளது. தகவலறிந்த தாசில்தார் கங்கா, துணை தாசில்தார் சுடலையாண்டி, யூனியன் துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஊராட்சி தலைவர் ஜெயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துப்பாண்டியன், முருகன், ஊராட்சி செயலர் ரமேஷ் ஆகியோர் விரைந்து சென்று ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்த நீரை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட மருத்துவ துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து தற்காலிகமாக அருகிலுள்ள சமுதாய நலக்கூடத்தில் இயங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

The post பொய்கை ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்தது appeared first on Dinakaran.

Tags : Kadayanallur ,Kadayanallur Union ,Dinakaran ,
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது