×

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி தற்காலிக நிழற்குடை அமைக்கப்படுமா?

காரைக்கால்,டிச.21: சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு தற்காலிக நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். காரைக்கால் அடுத்த திருநள்ளாறு தர்பாரேன்ஸ்வரர் தேவஸ்தானம் சனீஸ்வரர் பகவான் கோயிலில் நேற்று சனிபெயர்ச்சி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பினர். அப்போது ஆன்மிக பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நின்று இருந்தபோது திடீரென கனமழை பெய்தது. அப்போது அங்கு சிறிய அளவில் பேருந்து நிழற்குடை இருந்தால் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் நனைந்தபடியே காத்திருந்து பேருந்து ஏறி ஊர் திரும்பினர். சனிப்பெயர்ச்சி முடிந்து 48 நாட்கள் வரை பக்தர்கள் கூட்டம் இருக்கும். எனவே தற்போது மழைக்காலம் என்பதால் கூடுதலாக தற்காலிக பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி தற்காலிக நிழற்குடை அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Shanipairchi festival ,Karaikal ,Saturn ,Thirunallar ,Darbarenswarar ,
× RELATED காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில்...