×

பூசாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

பாடாலூர், டிச. 21: பாடாலூர் அருகே ஜோதிடம் பார்க்கும் பூசாரி வீட்டில் நகை , பணம் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலத்தூர் தாலுகா அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (65). இவர் எலுமிச்சம்பழம் வைத்து ஜோதிடம் சொல்லி வரும் பூசாரி. இவர் நேற்று அதிகாலை வயலுக்கு சென்று விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது வீட்டில் ஜோதிடம் பார்க்க வருபவர்கள் செலுத்தும் காணிக்கைக்காக வைத்திருந்த உண்டியல் மற்றும் ஒரு பவுன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பூசாரி வீட்டில் நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Badalur ,Padalur ,
× RELATED பாடாலூரில் சித்ரா பவுர்ணமியை...