×

மரத்தில் தூக்கில் தொங்கிய வட மாநில வாலிபர் சடலம்

வல்லம்,டிச.21: தஞ்சை அருகே வேலூர் கிராமம் அருகே வடவாறு வடகரை படுகை அருகே வாலிபர் ஒருவர் மரத்தில் தூக்கி மாட்டி கொண்டு சடலமாக தொடங்குவதாக விஏஓ சந்தோஷ் சரிதா கள்ளப்பெரம்பூர் போலீஸில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக தொங்கிய வாலிபர் உடையில் வைத்திருந்த ஆதார் அட்டையில் அவர் பீகார் மாநிலம் நகர் பகுதியை சேர்ந்த ரிசிஷிதேவ் என்பவரின் மகன் சஞ்சய் குமார்(30) என்பது தெரியவந்தது. இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

The post மரத்தில் தூக்கில் தொங்கிய வட மாநில வாலிபர் சடலம் appeared first on Dinakaran.

Tags : North ,State ,Vallam ,Vellore ,Thanjavur ,Vadagari ,
× RELATED அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி...