×

ரூ.30கோடி மோசடி விவகாரம்: ஷாருக்கானின் மனைவிக்கு நோட்டீஸ்.! அமலாக்கத்துறை நடவடிக்கை

மும்பை: ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலம் ரூ.30 கோடி மோசடி செய்த விவகாரம் தொடர்பாக ஷாருக்கானின் மனைவி கவுரி கானுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிரபல தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மனைவி கவுரி கான் உள்ளார். அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து 30 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

அதையடுத்து அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் கவுரி கானுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. மேலும் கவுரி கான் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் இடையே நடந்த நிதி பரிவர்த்தனைகள் குறித்து ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து கவுரி கான் தரப்பில் எவ்வித பதிலும் இதுவரை அளிக்கவில்லை. இந்நிலையில் ரூ.30 கோடி மோசடி விவகாரம் ெதாடர்பாக ஷாருக்கானின் மனைவி கவுரி கானுக்கு அமலாக்க இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியுள்ளது.

The post ரூ.30கோடி மோசடி விவகாரம்: ஷாருக்கானின் மனைவிக்கு நோட்டீஸ்.! அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Shah Rukh Khan ,Mumbai ,Gauri Khan ,Dinakaran ,
× RELATED சூப்பர் மேன் சுனில் நரைன்! ஷாருக் பாராட்டு