×

சுமார் ரூ.1,500 கோடி திரும்ப கிடைக்க வாய்ப்பு: அமைச்சர் பெரிய கருப்பன்

சென்னை: சிறப்பு கடன் தீர்வுத் திட்டம் மூலம் கூட்டுறவு நிறுவனங்களுக்கு ரூ.1,500 கோடி திரும்ப கிடைக்க வாய்ப்பு உள்ளது என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். 2022 டிச.31-ல் முழுமையாக தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் நிலுவையில் உள்ள தவணை தவறிய கடன்களுக்கு திட்டம் பொருந்தும். கடன் வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஒப்பந்தம் மேற்கொள்ளும் நாள் முடிய அசலுக்கு 9% சாதாரண வட்டி வசூலிக்கப்படும். கூடுதல் வட்டி, அபராத வட்டி இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் எனவும் கூறினார்.

The post சுமார் ரூ.1,500 கோடி திரும்ப கிடைக்க வாய்ப்பு: அமைச்சர் பெரிய கருப்பன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Valiya Karupan ,Chennai ,Big Karupan ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்