×

நெல்லையில் 5,000 பேருக்கு மருத்துவ பரிசோதனை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 103 மருத்துவ முகாம்களில் 5,000 பேர் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனர் என நெல்லை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ் ஐஏஎஸ் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவ முகாம்களில் 110 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. நாளை நடக்கும் 190 முகாம்களில் பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள செல்வராஜ் ஐஏஎஸ் அறிவுறுத்தியுள்ளார். நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டல பகுதிகளில் 3 பகுதிகளுக்கு இன்று முதல் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலப்பாளையம் மண்டலத்திற்கான நீரேற்று நிலையத்தில் பாதிப்பால் 27 டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது எனவும் கூறினார்.

 

The post நெல்லையில் 5,000 பேருக்கு மருத்துவ பரிசோதனை appeared first on Dinakaran.

Tags : Nella ,Nellai ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...