×

பெண்ணை மது குடிக்க வைத்து பலாத்காரம் செய்து கொலை: சடலத்தை டிரம்மில் அடைத்த கட்டிட மேஸ்திரி கைது

ஸ்ரீகாளஹஸ்தி: பெண்ணை மது குடிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், அனந்தப்பூர் மாவட்டம் குண்தக்கல்லு பகுதியை சேர்ந்தவர் நாகராஜு. இவரது மனைவி லட்சுமி (57). இருவரும் பலமநேர் நகரின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்களை சேகரித்து கடைகளில் விற்பனை செய்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நாகராஜு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இதனால் லட்சுமி தனியாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கட்டிட மேஸ்திரியான அதே பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் என்பவருடன் லட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு லட்சுமியும் கட்டிட வேலைக்கு மஞ்சுநாத்துடன் சென்று வந்தார். அப்போது லட்சுமிக்கு மஞ்சுநாத் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மது வாங்கி வந்து லட்சுமியை வற்புறுத்தி குடிக்க வைத்துள்ளார். போதையில் இருந்த லட்சுமியை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு அழைத்து சென்று மீண்டும் பலாத்காரம் செய்துள்ளார்.

போதை தெளிந்தபிறகு யாரிடமாவது லட்சுமி கூறிவிட்டால் என்ன செய்வது என்று கருதிய மஞ்சுநாத், அருகில் இருந்த கட்டையால் சரமாரி தாக்கியுள்ளார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கிருந்த தண்ணீர் டிரம்மில் சடலத்தை அடைத்து விட்டு சென்று விட்டார். நேற்று கட்டுமான பணிக்கு சென்ற தொழிலாளர்கள், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு நேற்று அப்பகுதியில் சுற்றி திரிந்த மஞ்சுநாத்தை (40) பிடித்து விசாரித்தனர். இதில் லட்சுமியை பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து மஞ்சுநாத்தை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

The post பெண்ணை மது குடிக்க வைத்து பலாத்காரம் செய்து கொலை: சடலத்தை டிரம்மில் அடைத்த கட்டிட மேஸ்திரி கைது appeared first on Dinakaran.

Tags : Srikalahasti ,
× RELATED விவசாயி டிராக்டரை எரித்த தெலுங்கு தேசம் கட்சியினர்