×

பொதுமக்களை மீட்டவர்களுக்கு நிவாரண உதவி பொருட்கள்: திமுகவினர் வழங்கினர்


திருவொற்றியூர்: சென்னை மாதவரம் தொகுதி 17 வது வார்டுக்கு உட்பட்ட வடபெரும்பாக்கம், கொசப்பூர், அரியலூர் மற்றும் செட்டிமேடு ஆகிய பகுதிகளில் மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் பல்வேறு மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இவ்வாறு சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு திமுக சார்பில், பாராட்டி உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாதவரம் வடபெரும்பாக்கம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

முன்னாள் கவுன்சிலர் கவிதா நாராயணன் தலைமை வகித்தார். மாதவரம் வடக்கு பகுதி திமுக செயலாளர் புழல் எம்.நாராயணன் கலந்துகொண்டு மழைக்காலத்தில் பணியாற்றியவர்கள் 150 பேரை பாராட்டி சால்வை அணிவித்து, அரிசி, போர்வை, கோதுமை மாவு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் மற்றும் உணவு வழங்கினார். மேலும் சிறப்பு சிறப்பு மருத்துவம் முகாம் நடத்தப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில் வட்ட செயலாளர் கே. கருணாகரன், அஜய் தென்னவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post பொதுமக்களை மீட்டவர்களுக்கு நிவாரண உதவி பொருட்கள்: திமுகவினர் வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : DMK ,Thiruvottiyur ,Vadaperumbakkam ,Kosapur ,Ariyalur ,Chettimedu ,Madhavaram ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...