×

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது


நத்தம்: நத்தம் அருகே, ஆசை வார்த்தை கூறி சிறுமியை பலாத்காரம் செய்து குழந்தைக்கு தாயாக்கிய வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (20). இவர், 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியுள்ளார். இதில், சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், நத்தம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து சூர்யாவை நேற்று கைது செய்தனர்.

The post சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Nattam ,Bokso ,
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...