×

ஒரத்தநாடு பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

ஒரத்தநாடு,டிச.20: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து கிராமங்கள் மற்றும் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு காண மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பேரூராட்சி தலைவர் சேகர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

200க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.மேலும் பெறப்பட்ட பல்வேறு மனுக்களை உடனடியாக ஆய்வு செய்து உரிய தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது. அனைத்து துறை அதிகாரிகளும் நேரில் நேரில் வந்து பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

The post ஒரத்தநாடு பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Tags : Orathanadu ,Orathanadu Municipal Corporation ,Thanjavur ,
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...