×

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் முதியவர் கைது

குன்னம்,டிச.20: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அகரம்சீகூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (70). இவர் அகரம்சீகூர் கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் அதே கிராமத்தை சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பெரியசாமி அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் அந்த சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் தெரிவித்தது.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மங்களமேடு மகளிர் போலீசில் புகார் செய்தனர். தகவலறிந்து வந்த போலீசார் பெரியசாமியிடம் இது குறித்து விசாரணை செய்தபோது அவருக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால் உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று குணமடைந்த அவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் முதியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Bocso ,Gunnam ,Periyasamy ,Akaramseekur village ,Perambalur district ,Agaramsegur ,
× RELATED குன்னம் அருகே மகா மாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்