×

காரில் வந்து ஆடு திருடும் மர்ம கும்பல்

 

கோபி, டிச.20: கோபி அத்தியப்ப கவுண்டன்புதூர் மற்றும் கரட்டூரில் காரில் வந்து ஆடுகளை திருடும் கும்பலை பங்களாபுதூர் போலீசார் தேடி வருகின்றனர். கோபி அருகே உள்ள பெரியகொடிவேரி கரட்டூரை சேர்ந்தவர் திம்மநாய்க்கர். கூலி தொழிலாளியான இவர் 12 ஆடுகளை வளர்த்து வருகிறார். இரவு நேரங்களில் அருகில் உள்ள கொட்டகையில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் ஆடுகளை அடைத்து வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

திடீரென ஆடுகள் சத்தம் கேட்டு திம்மநாய்க்கர் வந்து பார்த்தபோது காரில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் 4 ஆடுகளை திருடி காரில் எடுத்து செல்வது தெரிய வந்தது.  அதே போன்று, கொடிவேரி அருகே உள்ள அத்தியப்பகவுண்டன் புதூரை சேர்ந்த சென்னியப்பனின் 3 ஆடுகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் வந்து ஆடுகளை திருடும் கும்பலால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

The post காரில் வந்து ஆடு திருடும் மர்ம கும்பல் appeared first on Dinakaran.

Tags : Gobi ,Banglaputur ,Gobi Athiyappa Kauntanputur ,Karatur ,
× RELATED கோபி அருகே ஒத்தக்குதிரையில்...