×

காவல்துறை மீதான ஆர்எஸ்எஸ் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: நாட்டின் 76வது சுதந்தர தினம், விஜய தசமி, டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். சார்பில் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அனுமதி தரவில்லை எனக்கூறி அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆர்.எஸ்.எஸ்.தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜி.ராஜகோபால், ஜி.கார்த்திகேயன் ஆகியோர் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வாதிட்டனர். காவல்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, பொதுமக்களின் பாதுகாப்பை கருதி மூத்த உள்துறை அதிகாரிகளுடனும், காவல்துறை உயர் அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசித்து வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றார். இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.

The post காவல்துறை மீதான ஆர்எஸ்எஸ் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : RSS ,Chennai ,Independence Day ,Vijaya Dasami ,Dr. ,Ambedkar ,Tamil Nadu ,
× RELATED முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மோடி: பழ.நெடுமாறன்