×

தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் லிப்டில் சிக்கிய காவலாளி கால் எலும்பு முறிவு: போலீசார் விசாரணை

அண்ணாநகர்: அண்ணாநகர் 6வது தெரு இசட் பிளாக் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, செங்கல்பட்டு மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த காளிப்பிள்ளை (65), காவலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு இவரது மகன் நந்தகோபால், தந்தைக்கு உணவு கொடுப்பதற்காக அங்கு வந்துள்ளார். அப்போது, அங்கு தந்தை இல்லாததால் அடுக்குமாடி குடியிருப்பில் வெகுநேரமாக தேடி பார்த்தபோது, குடியிருப்பில் உள்ள லிப்டில் இருந்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்ற தந்தையின் சத்தம் கேட்டு, மகன் ஓடி சென்று பார்த்தார்.

அப்போது, லிப்ட்டில் இவரது தந்தை சிக்கிக் கொண்டு கால் முறிந்து ரத்த வெள்ளத்தில் வெளியே வரமுடியாமல் தவித்து கொண்டிருந்தார். இதை பார்த்த மகன் கடும் அதிர்ச்சி அடைந்து அலறி கூச்சலிட்டார். சத்தம்கேட்டு குடியிருப்பில் உள்ளவர்கள் ஒடி வந்து, இதுபற்றி அண்ணாநகர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், திருவல்லிக்கேணி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் ஆகிய 2 பகுதிகளில் இருந்து வாகனத்தில் விரைந்து வந்து, லிப்டில் சிக்கிய காவலாளியை சுமார் ஒரு மணி நேரமாக போராடி மீட்டனர்.

காலில் எலும்பு முறிவு மற்றும் கையில் படுகாயமடைந்த அவரை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில், சம்பவம் நடந்த இரவு லிப்டில் செல்லும்போது கால் இடறியதாகவும் அதனால், லிப்ட்டில் சிக்கி படுகாயமடைந்தது தெரிந்தது. மேலும், லிப்டில் சிக்கி கொண்டு பல மணி நேரமாக போராடிய தந்தையை மகன் மீட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் லிப்டில் சிக்கிய காவலாளி கால் எலும்பு முறிவு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Annanagar 6th Street Z Block ,Gudalur, ,Chengalpattu district ,Dinakaran ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் டிரைவர் கைது