×

முகவரி கேட்பது போல் பெண்ணிடம் 5 சவரன் பறிப்பு: 2 கொள்ளையர்கள் கைது

சென்னை: சென்னை சூளை விச்சூர் முத்தையா தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (48). இவர், நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர், சரஸ்வதியிடம் முகவரி கேட்பது போல் நடித்து, அவர் கழுத்தில் கிடந்த 5 சவரன் செயினை பறிக்க முயன்றனர். இதை சற்றும் எதிர்பார்க்காத சரஸ்வதி அலறி கூச்சலிட்டபடி, 2 வழிப்பறி கொள்ளையர்களிடம் இருந்து தப்பித்து ஓடமுயன்றார். அப்போது, வழிப்பறி கொள்ளையர்கள் கத்தியை காட்டி, சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டி, அவரது 5 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பினர்.

இதுகுறித்து சரஸ்வதி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், பழைய குற்றவாளிகளான செம்மஞ்சேரி 7வது ெதருவை சேர்ந்த பிரபல வழிப்பறி கொள்ளையன் சந்தோஷ் (எ) சாண்டி (23), அவரது கூட்டாளியான கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை சேர்ந்த ரபீக் (எ) முகமது பாரூக் (19) என தெரியவந்தது. அவர்களை நேற்று முன்தினம் நள்ளிரவு அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 சரவன் செயின், ஒரு கத்தி, வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தோஷ் மீது 3 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post முகவரி கேட்பது போல் பெண்ணிடம் 5 சவரன் பறிப்பு: 2 கொள்ளையர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Saraswati ,Choolai Vichoor Muthiah Street ,Dinakaran ,
× RELATED வ.புதுப்பட்டியில் தீ தடுப்பு சிறப்பு பயிற்சி