×

வீடு புகுந்து காதலியை எரித்துக்கொன்ற காதலன்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட நத்தம் பகுதியை சேர்ந்தவர் கமலேசன், ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி மஞ்சு (42). கமலேசன் கடந்த 2013ம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து 2014ம் ஆண்டு முதல் கமலேசன் மனைவி மஞ்சுவுக்கும், அதே பகுதியில் முடி திருத்தும் தொழில் செய்து வரும் குப்பன் (51) என்பவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. பின்னர் கணவன் மனைவிபோல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் 2018ம் ஆண்டு முதல் மஞ்சு மற்றும் குப்பன் இருவரும் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்துள்ளனர்.

இந்நிலையில் மஞ்சுவுக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குப்பன், நேற்று முன்தினம் இரவு திடீரென மஞ்சுவின் வீட்டிற்கு சென்று தான் செலவளித்த ₹10 லட்சம் கேட்டு தகராறு செய்தார். பின்னா் கேனில் கொண்டு வந்த பெட்ரோலை மஞ்சு மீது ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினார். இதில் மஞ்சு உயிரிழந்தார். மஞ்சுவுக்கு தீவைத்தில் குப்பனுக்கு தீ காயம் ஏற்பட்டது. இதனால் அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். அவரை கந்திலி போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வீடு புகுந்து காதலியை எரித்துக்கொன்ற காதலன் appeared first on Dinakaran.

Tags : Tirupathur ,Kamalesan ,Natham ,Kandili ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே...