நெல்லை: மறு அறிவிப்பு வரும் வரை நெல்லை ரயில் நிலையம் செயல்படாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தேங்கியுள்ள மழைநீர் ராட்சத மோட்டர் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளம் வடிந்தது. மழை குறைந்ததால் நெல்லையில் வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றில் படிப்படியாக நீர்மட்டம் குறைந்து வருகிறது.
The post மறு அறிவிப்பு வரும் வரை நெல்லை ரயில் நிலையம் செயல்படாது என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.