×

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் உள்ள மதிகெட்டான் ஓடையில் காட்டாற்று வெள்ளம்!!

தூத்துக்குடி: தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் உள்ள மதிகெட்டான் ஓடையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஓடையில் இருந்து வெள்ளநீர் வெளியேறி உப்பளங்களை மூழ்கடித்ததால் மக்கள் வேதனையடைந்துள்ளனர். மதிகெட்டான் ஓடையில் ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளத்தால் புள்ளாவழி கிராமம் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. காட்டாற்று வெள்ளத்தால் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக தீவு போல் மாறியுள்ள புள்ளாவழி கிராமத்தில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் உள்ள மதிகெட்டான் ஓடையில் காட்டாற்று வெள்ளம்!! appeared first on Dinakaran.

Tags : Madiketan River ,Thoothukudi-Tiruchendoor Road ,Thoothukudi ,Madiketan ,Thiruchendoor road ,Madiketan Stream ,Thoothukudi-Thiruchendur Road ,
× RELATED தூத்துக்குடி மருத்துவமனையில் ஏ.சி. வார்டு தொடக்கம்..!!